ஒரு உறவுமுறையை எடுத்தால், அது இப்படி தான் என்று மனதில் அனைவருக்கும் ஒரு கற்பனை உண்டு. உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான்.
ஆனால், உண்மையில் இத்தகைய நிலையான எண்ணமானது சரியானது அல்ல. ஏனெனில் இவை அனைத்தும் மனதில் கற்பனையாக ஒரு சில நடவடிக்கைகளைக் கொண்டு, மனதில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
இத்தகைய மனதில் உருவாக்கப்பட்டு, அழியாமல் இருக்கும் ஒரு சில உறவுமுறைகள் பற்றிய தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்ற வேண்டும்.
சொல்லப்போனால், இந்த மாதியான தவறான எண்ணங்கள் மனதில் நிலவுவதற்கு நமது சமூகமும் ஒரு காரணம். ஏனெனில், இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்து விட்டால், அது அப்படியே காட்டுத்தீ போல் பரவி, அந்த விஷயம் அப்படியே மக்கள் மத்தியிலும், அவர்கள் மனதிலும் அழியாமல் பதிந்துவிடும்.
ஆண் பெண் நட்பு
நட்புறவில் ஆண் பெண் நட்புறவு நிலைக்காது என்று உலகில் உள்ள அனைவருமே சொல்வது தான். ஆனால், அந்த எண்ணம் அனைத்தும் நண்பர்களாக பழகுபவர்களின் மனதைப் பொறுத்தது.
அவர்கள் மனதில் நண்பர்களாக நினைத்து பழகினால், நிச்சயம் நீண்ட நாட்கள் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். இதனை மாற்ற அவர்களது மனதைத் தவிர மற்றவர்களால் முடியாது.
முன்னாள் காதல்
காதல் செய்து தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் நண்பர்களாக பழகுவது நல்லதில்லை, அவர்களால் நண்பர்களாக பழகுவதற்கு முடியாது என்று பலர் சொல்வார்கள்.
ஏன் இருக்க முடியாது? ஒரு முறை காதலர்களாக இருந்த இரண்டு பேர் இடையே, ஒரு உண்மையான நட்பு மற்றும் மரியாதை இருக்க முடியாது? இது மிகவும் அபத்தமான எண்ணம்.
வயதான ஆண் மற்றும் இளம்பெண்
எப்போதும் ஒரு வயதான ஆணுடன் ஒரு இளம் பெண் துணைக்கு இருந்தால், அப்போது அனைவரது மனதிலும் தோன்றும் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றும்.
ஒன்று அந்த பெண் இவர் இறந்த பிறகு பணத்தை அனுபவிப்பதற்காக பழகலாம் அல்லது அந்த முதியவருக்கு ஆசை இருக்கலாம் என்று தான். ஏன் வெவ்வேறு தலைமுறையினரிடம் நட்புறவு இருக்கக்கூடாதா?
பெண்கள்
பெண்களுக்குள் நிச்சயம் பொறாமை இருக்கும். ஆனால் நண்பர்களாக இருக்கும் பெண்கள் நிச்சயம், தன் தோழியின் மீது பொறாமை கொள்ளமாட்டாள்.
ஏனெனில் பெண்களது நட்புறவும் மிகவும் வலிமையானது. அவர்கள் ஆண்கள் எப்படி தன் தோழனுக்கு எப்போது ஆதரவாக இருப்பார்களோ, அதேப்போல் பெண்களும் தன் தோழிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்
காதல்
காதல் எதையும் எதிர்பார்க்காமல் வருவது என்று சொல்வார்கள். ஆனால் அது அன்றைய காதல் தான் தவிர. இன்றைய காலத்தில் உள்ள காதலில் நிச்சயம் எதிர்பார்ப்பானது இருக்கும்.
நீண்ட தூர உறவுகள்
மக்கள் நீண்ட தூர உறவுகள் வேலைக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா?இந்த நவீன உலகில் காதலிப்பவர்கள் நிச்சயம் ஒரே இடத்தில், ஊரில் வேலை செய்ய முடியாது. அவர்கள் தங்கள் வேலைக்காக வேறு ஊரில் தங்கியிருப்பார்கள். இதனால் வீட்டிறக் அருகில் உள்ளவர்களது பேச்சாலேயே, நல்ல உறவானது கெட்ட நிலைக்கு வந்துவிடும். ஆனால் அன்பு,நம்பிக்கை, உண்மை இருந்தால், எங்கிருந்தாலும், அந்த உறவு நீடிக்கும்.
ஆனால், உண்மையில் இத்தகைய நிலையான எண்ணமானது சரியானது அல்ல. ஏனெனில் இவை அனைத்தும் மனதில் கற்பனையாக ஒரு சில நடவடிக்கைகளைக் கொண்டு, மனதில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
இத்தகைய மனதில் உருவாக்கப்பட்டு, அழியாமல் இருக்கும் ஒரு சில உறவுமுறைகள் பற்றிய தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்ற வேண்டும்.
சொல்லப்போனால், இந்த மாதியான தவறான எண்ணங்கள் மனதில் நிலவுவதற்கு நமது சமூகமும் ஒரு காரணம். ஏனெனில், இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்து விட்டால், அது அப்படியே காட்டுத்தீ போல் பரவி, அந்த விஷயம் அப்படியே மக்கள் மத்தியிலும், அவர்கள் மனதிலும் அழியாமல் பதிந்துவிடும்.
ஆண் பெண் நட்பு
நட்புறவில் ஆண் பெண் நட்புறவு நிலைக்காது என்று உலகில் உள்ள அனைவருமே சொல்வது தான். ஆனால், அந்த எண்ணம் அனைத்தும் நண்பர்களாக பழகுபவர்களின் மனதைப் பொறுத்தது.
அவர்கள் மனதில் நண்பர்களாக நினைத்து பழகினால், நிச்சயம் நீண்ட நாட்கள் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். இதனை மாற்ற அவர்களது மனதைத் தவிர மற்றவர்களால் முடியாது.
முன்னாள் காதல்
காதல் செய்து தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் நண்பர்களாக பழகுவது நல்லதில்லை, அவர்களால் நண்பர்களாக பழகுவதற்கு முடியாது என்று பலர் சொல்வார்கள்.
ஏன் இருக்க முடியாது? ஒரு முறை காதலர்களாக இருந்த இரண்டு பேர் இடையே, ஒரு உண்மையான நட்பு மற்றும் மரியாதை இருக்க முடியாது? இது மிகவும் அபத்தமான எண்ணம்.
வயதான ஆண் மற்றும் இளம்பெண்
எப்போதும் ஒரு வயதான ஆணுடன் ஒரு இளம் பெண் துணைக்கு இருந்தால், அப்போது அனைவரது மனதிலும் தோன்றும் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றும்.
ஒன்று அந்த பெண் இவர் இறந்த பிறகு பணத்தை அனுபவிப்பதற்காக பழகலாம் அல்லது அந்த முதியவருக்கு ஆசை இருக்கலாம் என்று தான். ஏன் வெவ்வேறு தலைமுறையினரிடம் நட்புறவு இருக்கக்கூடாதா?
பெண்கள்
பெண்களுக்குள் நிச்சயம் பொறாமை இருக்கும். ஆனால் நண்பர்களாக இருக்கும் பெண்கள் நிச்சயம், தன் தோழியின் மீது பொறாமை கொள்ளமாட்டாள்.
ஏனெனில் பெண்களது நட்புறவும் மிகவும் வலிமையானது. அவர்கள் ஆண்கள் எப்படி தன் தோழனுக்கு எப்போது ஆதரவாக இருப்பார்களோ, அதேப்போல் பெண்களும் தன் தோழிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்
காதல்
காதல் எதையும் எதிர்பார்க்காமல் வருவது என்று சொல்வார்கள். ஆனால் அது அன்றைய காதல் தான் தவிர. இன்றைய காலத்தில் உள்ள காதலில் நிச்சயம் எதிர்பார்ப்பானது இருக்கும்.
நீண்ட தூர உறவுகள்
மக்கள் நீண்ட தூர உறவுகள் வேலைக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா?இந்த நவீன உலகில் காதலிப்பவர்கள் நிச்சயம் ஒரே இடத்தில், ஊரில் வேலை செய்ய முடியாது. அவர்கள் தங்கள் வேலைக்காக வேறு ஊரில் தங்கியிருப்பார்கள். இதனால் வீட்டிறக் அருகில் உள்ளவர்களது பேச்சாலேயே, நல்ல உறவானது கெட்ட நிலைக்கு வந்துவிடும். ஆனால் அன்பு,நம்பிக்கை, உண்மை இருந்தால், எங்கிருந்தாலும், அந்த உறவு நீடிக்கும்.
0 comments:
Post a Comment