சமீபத்தில் திரை இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னமும் என்னுடைய தலைமுறையை சேர்ந்த பல இளைஞர்கள் இந்த அற்புத நாவலை படிக்காமல் இருப்பது வருத்தமான விஷயம். அதை கருத்தில் கொண்டு இந்த நாவலை பற்றி சிறு குறிப்பும், முழு நாவலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த பதிவு உதவும். பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது.தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
-
ஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy
பொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம் ஆஸ்கார் கிடைக்காதது நல்லது தான் என்ற ரீதியில் பேசுவதுண்டு. உண்மையில் இந்திய படங்களுக்கு கொடுத்தால் வர்த்தகம் பாதிக்கும் என்பது ஆஸ்கார் குழுவின் எண்ணம், அதனால் கடைசி பிரிவு வரை இந்திய படங்களை கொண்டு சென்று விட்டு ஏதாவது ஒரு காரணம் சொல்லி விருது தராமல் புறந்தள்ளி விடுவதுண்டு..
உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories
இந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் சொல்லி இருக்காரு. நாம பத்திரிகைல படிக்கற மாதிரி எல்லா விஷயங்களும் உண்மையாவே அப்படியே நடக்கறது இல்ல. தொலைகாட்சியில் பாக்கற மாதிரி எதுவும் நிஜம் இல்லை. கேமரா கோணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு நம்மை ஏமாற்றபடுவது தான் உண்மையாகவே நடக்குது.
Subscribe to:
Posts (Atom)